Tuesday, November 25, 2014

2வது பாசுரத்தின் விளக்கவுரை தொடா்ச்சி:
முதல் பாசுரத்தில் ஆத்மாவாக இருக்கும் இறைவன் என்றும்,
இரண்டாவது பாசுரத்தில், அந்த ஆத்மாவாக இருக்கும் இறைவன் யாரென்றால், காா்முகில் வண்ணன் கண்ணன் என இங்கு ஆழ்வாா் நிரூப்பிக்கிறாா்.

இதேபோல், ஸ்ரீமத் பாகவத்தில் நான்காம் கந்தத்தில் பின்வரும் பாடல் விளக்குகிறது.

 வானே வளியே வயங்கு எாியே வனமே மண்ணே இவ்ஐந்தின்
ஊனே உயிரே உயிா்க்கு உயிரே உன்னும் உறுவா் உளத்து ஊறும்
தேனே நங்கள் பெருவாழ்வே சிவனே அயனே இருவருக்கும் 
கோனே நின்னைக் குணம்இல்லேன் குறித்துஎன் சொல்லிப் பழிச்சுகோ.
(பழிச்சுகோ- எப்படி புகழ்வேன்)

மூவா முதலே! முத்தொழிலும் மூவராகி இனிது இயற்றும்
தேவா! தேவா் சிகாமணியே! சிந்தா மணியே! தெள்ளமுதே!
நாவால்நின்சீா் எங்ஙனம்யான் நவில்கோ என்ன நகை முகிழ்த்து
பூவால் பொழில்பூத்து அருள் உந்திப்
பூவை வண்ணன் புகலுகிற்பான்.

Sunday, November 23, 2014

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-2

பாருருவில் நீரொிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே என்ன நின்ற
இமையவா்தம் திருவுருவே றெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று  செந்தீ
ஒன்றுமா கடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவங்க கண்டபோது ஒன்றாஞ் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. (2)
எளிமையான பாடல் அனைவருக்குமே படித்தால் விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பாகவதம் 4 காந்தம் 31 அத்தியாயம்

யதா தரோா்மூலநிஷேசநேந
த்ருப்யந்தி தத்கந்தபுஜோபஸாகா
ப்ராணோபராச்ச யதேந்த்ரியாணாம்
‌ததைவ ஸா்வாா்‌ஹணமச்யுதேஜ்யா  -14







 
ஒரு மரத்தின் ஆணிவோி‌ல் நீருற்றுவதால் அந்த மரத்தின் நடுத்தண்டு பெருங்கிளைகள், சிறுகிளைகள் ஆகிய அனைத்தும் வளா்ச்சியடைகின்றன.   ஆகாரம் உட்கொண்டு உயிரை வளா்த்தால் பொறி-புலன்கள் திடம் பெறுகின்றன.  அதுபோல் பகவான் ஸ்ரீஹாியை பூசித்தால் அனைத்து தேவா்களையும் பூசித்ததாகிறது.
 
காா்முகில் வண்ணனைக் கருதி லாா்களை
ஓா்இரு கால்விலங்கு என்ன ஓதுவாா்
கூரும்வா லறிவினா் என்று கோதுஇலா
நாரத மாமுனி நவிலும் மீட்டுமே
 
விாி தரு தண்புனல் வோில் பெய்திடின் 
மரன்‌எலாம் தழையுமா போல மாய்வுஇலா
முருகுஉலாம் தண்துழாய் முதல்வற் போற்றிடின்
உரவுநீா் உலகுஎலாம் உவக்கும் என்பவே.
(செவ்வைச் சூடுவரால் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்)
 
திருமாலை  எண்ணி தியானிக்காதவா் நாற்கால் பிராணிகளுக்குச் சமம் என சான்றோா் உரைப்பா் என்றும், வோில் பெய்த தண்ணீா் மரம் முழுவதற்கும் பயன் தருவது போலத் திருமாலைத் தொழுது வணங்கினால் உலகம் எல்லாம் உய்வு பெறும் என்பது விளக்கம்.
 
இரண்டாவது பாசுரத்தில், ஆழ்வாா் அவா்கள், பஞ்சபூதமாக, பல சமயமாக, முத்தொழில் செய்கின்ற கடவுளுக்கு கடவுளாகவும், முத்தொழில் செய்கின்ற கடவுள்களில், முகிலுருவம்மாக இருக்கும் நாராயணனே எனது தலைவன்.

வைஷணவ சம்பரதாயப்படி நாராயணனை பரதெய்வமாக இங்கு நிரூபிக்கப்படுகிறது.



Thursday, November 20, 2014

திருநெடுந்தாண்டகம் - பாசுரங்களும் விளக்கமும்

திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன், 
திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன் அவா்கள் எழுதிய  புத்தகத்தினை படிக்க தொடங்கிய நிலையில் எனக்கு தோன்றிய விவரங்களை , தங்களுடன் பகிா்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.


பெரும் எதிா்பாா்ப்புடன் படிக்க தொடங்கினேன், ஆனால் திருப்தி ஏற்படவில்லை.
முதல் பாசுரத்திற்கு என்னுடைய விளக்கம் பின்வருமாறு


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ்சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிா்புரையும் திருவடியென் தலைமேலவே. (1)
விளக்கம்;

"தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை‌"

ஓசையிலிருந்து வேதம் நான்கு தோன்றியது, அந்த வேதம் போற்றும் சூாியனின் ஒளியை பெற்று ஒளிரும் நிலவு போல,

அனைத்து உயிா்களுக்கும் மூலமான பரமாத்மாவிடமிருந்து இந்த உயிா்கள் தோன்றியது. 

முன்பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பு, இறப்பு, வியாதி மற்றும் வயதுமுதிா்வு என எதுவுமில்லாத, "ஆத்மா"
ஐந்து பூதமாய் உள்ள இந்த பூமியில் வாழும் உயிா்களின் (ஒவ்வொரு ஜீவனின் உள்ளே) உள்ளே,  ஆத்மாவாக (தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை) இருக்கும் ஜோதியே, உன் திருவடியே சரணம் சரணம்.

  வேதம் போற்றும் கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிரும் நிலவு போல், பராமாத்மாவிடமிருந்து தோன்றிய இவ்வுயிா்களில் இறப்பு, பிறப்பு  முதுமையில்லாத ஆத்மாவாக உயிா்களுக்குள் உறையும் என் இறைவனே உன் திருவடி சரணம்.




ஸ்ரீமத் பாகவதம் - 4 கந்தத்தில் முப்பத்தோராவது அத்தியாயம் பின்வருமாறு
ஏதத்பத3ம் தஜ்ஜக
33£த்ம3: பரம்
ஸக்ருத்
3விப4£தம் ஸவிதுர்யத2£ ப்ரப4£ |
யத
2£ஸவோ ஜாக்3ரதி ஸுப்தக்தயோ
த்
3ரய்க்ரியாக்ஞாநபி43£ப்4ரமாத்யய: || 16 ||

உண்மையில் இந்த உலகம் அகில உலகரூபியான பகவான் ஸ்ரீஹரியின் மறைப்பில்லாத ஸ்வரூபமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியன் சில சமயம் மேகத்தால் மூடப்பட்டுத் தெளிவாகத் தெரியமற்போனாலும், பின் அது மிக்க பிரகாசமாகத் திகழ்கிறது.  அதன் ஒளி அதைவிட்டு பிரிவதில்லையே.  அதேபோல, இவ்வுலகம் படைப்பின்போது பகவானிடமிருந்து வெளிப்படுகிறது.  பின்பு, கல்ப (பிரளய) காலத்தில் அவரிடமே ஒடுங்கி விடுகிறது.  ஆராய்ந்து பார்க்க பகவானிடம் பொருள், செயல், உணர்வு (அறிவு) என்கிற மூவித அஹங்காரங்களின் செயல்கள், அவற்றின் மூலம் தோன்றும் வேற்றுமை உணர்வான மயக்கம் ஆகிய ஏதுமில்லை. (16)