Thursday, November 20, 2014

திருநெடுந்தாண்டகம் - பாசுரங்களும் விளக்கமும்

திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன், 
திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன் அவா்கள் எழுதிய  புத்தகத்தினை படிக்க தொடங்கிய நிலையில் எனக்கு தோன்றிய விவரங்களை , தங்களுடன் பகிா்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.


பெரும் எதிா்பாா்ப்புடன் படிக்க தொடங்கினேன், ஆனால் திருப்தி ஏற்படவில்லை.
முதல் பாசுரத்திற்கு என்னுடைய விளக்கம் பின்வருமாறு


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ்சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிா்புரையும் திருவடியென் தலைமேலவே. (1)
விளக்கம்;

"தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை‌"

ஓசையிலிருந்து வேதம் நான்கு தோன்றியது, அந்த வேதம் போற்றும் சூாியனின் ஒளியை பெற்று ஒளிரும் நிலவு போல,

அனைத்து உயிா்களுக்கும் மூலமான பரமாத்மாவிடமிருந்து இந்த உயிா்கள் தோன்றியது. 

முன்பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பு, இறப்பு, வியாதி மற்றும் வயதுமுதிா்வு என எதுவுமில்லாத, "ஆத்மா"
ஐந்து பூதமாய் உள்ள இந்த பூமியில் வாழும் உயிா்களின் (ஒவ்வொரு ஜீவனின் உள்ளே) உள்ளே,  ஆத்மாவாக (தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை) இருக்கும் ஜோதியே, உன் திருவடியே சரணம் சரணம்.

  வேதம் போற்றும் கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிரும் நிலவு போல், பராமாத்மாவிடமிருந்து தோன்றிய இவ்வுயிா்களில் இறப்பு, பிறப்பு  முதுமையில்லாத ஆத்மாவாக உயிா்களுக்குள் உறையும் என் இறைவனே உன் திருவடி சரணம்.




ஸ்ரீமத் பாகவதம் - 4 கந்தத்தில் முப்பத்தோராவது அத்தியாயம் பின்வருமாறு
ஏதத்பத3ம் தஜ்ஜக
33£த்ம3: பரம்
ஸக்ருத்
3விப4£தம் ஸவிதுர்யத2£ ப்ரப4£ |
யத
2£ஸவோ ஜாக்3ரதி ஸுப்தக்தயோ
த்
3ரய்க்ரியாக்ஞாநபி43£ப்4ரமாத்யய: || 16 ||

உண்மையில் இந்த உலகம் அகில உலகரூபியான பகவான் ஸ்ரீஹரியின் மறைப்பில்லாத ஸ்வரூபமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியன் சில சமயம் மேகத்தால் மூடப்பட்டுத் தெளிவாகத் தெரியமற்போனாலும், பின் அது மிக்க பிரகாசமாகத் திகழ்கிறது.  அதன் ஒளி அதைவிட்டு பிரிவதில்லையே.  அதேபோல, இவ்வுலகம் படைப்பின்போது பகவானிடமிருந்து வெளிப்படுகிறது.  பின்பு, கல்ப (பிரளய) காலத்தில் அவரிடமே ஒடுங்கி விடுகிறது.  ஆராய்ந்து பார்க்க பகவானிடம் பொருள், செயல், உணர்வு (அறிவு) என்கிற மூவித அஹங்காரங்களின் செயல்கள், அவற்றின் மூலம் தோன்றும் வேற்றுமை உணர்வான மயக்கம் ஆகிய ஏதுமில்லை. (16)
 

No comments: