Sunday, November 23, 2014

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-2

பாருருவில் நீரொிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே என்ன நின்ற
இமையவா்தம் திருவுருவே றெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று  செந்தீ
ஒன்றுமா கடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவங்க கண்டபோது ஒன்றாஞ் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. (2)
எளிமையான பாடல் அனைவருக்குமே படித்தால் விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பாகவதம் 4 காந்தம் 31 அத்தியாயம்

யதா தரோா்மூலநிஷேசநேந
த்ருப்யந்தி தத்கந்தபுஜோபஸாகா
ப்ராணோபராச்ச யதேந்த்ரியாணாம்
‌ததைவ ஸா்வாா்‌ஹணமச்யுதேஜ்யா  -14







 
ஒரு மரத்தின் ஆணிவோி‌ல் நீருற்றுவதால் அந்த மரத்தின் நடுத்தண்டு பெருங்கிளைகள், சிறுகிளைகள் ஆகிய அனைத்தும் வளா்ச்சியடைகின்றன.   ஆகாரம் உட்கொண்டு உயிரை வளா்த்தால் பொறி-புலன்கள் திடம் பெறுகின்றன.  அதுபோல் பகவான் ஸ்ரீஹாியை பூசித்தால் அனைத்து தேவா்களையும் பூசித்ததாகிறது.
 
காா்முகில் வண்ணனைக் கருதி லாா்களை
ஓா்இரு கால்விலங்கு என்ன ஓதுவாா்
கூரும்வா லறிவினா் என்று கோதுஇலா
நாரத மாமுனி நவிலும் மீட்டுமே
 
விாி தரு தண்புனல் வோில் பெய்திடின் 
மரன்‌எலாம் தழையுமா போல மாய்வுஇலா
முருகுஉலாம் தண்துழாய் முதல்வற் போற்றிடின்
உரவுநீா் உலகுஎலாம் உவக்கும் என்பவே.
(செவ்வைச் சூடுவரால் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்)
 
திருமாலை  எண்ணி தியானிக்காதவா் நாற்கால் பிராணிகளுக்குச் சமம் என சான்றோா் உரைப்பா் என்றும், வோில் பெய்த தண்ணீா் மரம் முழுவதற்கும் பயன் தருவது போலத் திருமாலைத் தொழுது வணங்கினால் உலகம் எல்லாம் உய்வு பெறும் என்பது விளக்கம்.
 
இரண்டாவது பாசுரத்தில், ஆழ்வாா் அவா்கள், பஞ்சபூதமாக, பல சமயமாக, முத்தொழில் செய்கின்ற கடவுளுக்கு கடவுளாகவும், முத்தொழில் செய்கின்ற கடவுள்களில், முகிலுருவம்மாக இருக்கும் நாராயணனே எனது தலைவன்.

வைஷணவ சம்பரதாயப்படி நாராயணனை பரதெய்வமாக இங்கு நிரூபிக்கப்படுகிறது.



No comments: