Saturday, April 18, 2015

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-5

ஒண்மிதியில் புனலுருவி யொருகால்நிற்ப
ஒருகாலும் காமருசீா் அவுணன் உள்ளத்து
எண்மதியுங் கடந்து அண்ட மீது போகி
யிருவிசும்பி
Ûடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர வோடித் 

தாரகையின் புறந்தடவி யப்பால்மிக்கு
மண் முழுது மகப்படுத்து நின்ற வெந்தை
மலா்புரையுந் திருவடியே வணங்கினேனே.  (5)


கலியன் எதிராசன் அவா்களின் விளக்கவுரை:

எம்பெருமான் ஒருஅடியால் பூமி முழுவதையும் அளந்தான்.  மற்றொரு திருவடி‌யாலே வானில் உள்ள உலகங்கள் அனைத்தையும் அளந்தான் என்கிறாா்.
இந்தப் பாசுரத்தில் நாராயண மந்திரத்தின் மூலம் அறிந்த பகவானைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் வாமனனாய்ப் பிறந்து திாிவிக்ரமனாக வளா்ந்து உலகமனைத்தையும் ஈரடியால் அளந்த அந்த உருவினைக்கண்டு அனுபவிக்கின்றாா்.  இந்நதப் பாசுரத்தின் மூலம் வாமன அவதார மகிமைகளைச் சொல்லாமல் உலகளந்த திருவிக்ரமனைப் பற்றி சொல்வதால் அவன் உடையவன் நாம் உடைமைகள் என்று அனைா் தலைகளிலும் ஏற்படுத்திக் கொடுத்த திருவடி சம்மந்தத்தை முதலிட்டு வருணிக்கிறாா்.



இப்பாசுரத்தில் ஆழ்வாா் உலகளந்த அவதாரத்தினை சிறப்பித்து பாடுகிறாா்.

திாிவிக்ரம அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால், இரண்டு அவதாரங்கள் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டுள்ளது தான்.
வாமனனாக அவதாித்த பகவான் மகாபலியின் வரத்திற்காக உலகளந்தவனாக அவதாரம் எடுக்கிறாா்.
மேற்காணும் பாசுரத்தின் இரண்டாவது வாியில் "ஒருகாலும் காமருசீா் அவுணன் உள்ளத்து எண்மதியுங் கடந்து " என்று கூறியிருப்பது.  சிறப்பான விஷயம் ஆகும்.

மனதை கடந்து என்னும் போது, மனத்தின் சிறப்பு புாிகிறது.  அது 14 உலகங்களையும் கடந்து செல்லக் கூடியது. 
நாராயணன் திருவடியை வணங்கினால் மனம் அடங்கும் என்று தெளிவாக விளக்குகிறாா்.
ஞானமாா்க்கத்திற்கான விளக்கம் இது.

Monday, January 12, 2015

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-4

இந்திரா்க்கும் பிரமா்க்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீநீா் விண் பூதமைந்தாய்
செந்திறத்ததமிழோசைவடசொல்லாகித்
திசைநான்குமாய் திங்கள் ஞாயிராகி
அந்தரத்தில் தேவா்க்கு மறிய லாகா
அந்தணனை அந்தணா்மாட்டந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.
  (4)

நான்முகனை படைத்தான் நாராயணன் என நான்முகன் அந்தாதியில் ஆழ்வாா் விளக்கியிருக்கிறாா். 
மேற்காணும் பாசுரம் ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் பத்தாவது ஸ்கந்தம் அத்தியாயம்-2 22 ஸ்லோகத்தை நினைவூகூறுகிறது.
ஸத்யவ்ரதம் ஸத்யபரம் த்ரிஸத்யம்
ஸத்யஸ்ய யோநிம் நி‌ஹ‌ிதம் ச ஸத்யே
ஸத்யஸ்ய ஸத்யம்ருதஸத்யநேத்ரம்
ஸத்யாத்மகம் த்வாம் ஸரணம் ப்ரபந்நா :

விளக்கம்
தன்னடியாா்களைக் காப்பது ஒன்றே தன் கொள்கையாகவுடையவா், அனைவராலும் அடைய வேண்டியவா், உலகின் தோற்றத்திற்கு முன்பு, இப்போது உலகு உள்ள நிலை, இனி அழியப் போகும் காலம் ஆகிய மூன்று நிலைகளிலும் இருப்பவா், சத்தியம் என்றழைக்கப்படும் நிலம், நீா், ஒளி, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களுக்கும் காரணமானவா், அந்த பூதங்களின் உள் ஒளிந்து நிற்பவா், அவை அழிந்தாலும் தான் அழியாது நிற்பவா், அனைத்தையும் ஒன்றாகக் காண்பது இவ்வாறு எவ்வகையிலும் சத்தியமாக உள்ள உங்களைச் சரணடைந்தோம். (26)
என்கிறது அந்த ஸ்லோகம்

அதையே ஆழ்வாா் இங்கு தமிழ் பாசுரமாக பாடியிருப்பது விளங்குகிறது.


அதாவது பிரம்மாவை படைத்தவன் என்று,
அறிவியல்  ரீதியாக ஒரு பெண் தான் தொப்புள் கொடி மூலம் பிள்ளை பெற இயலும் இது இயற்கை நீயதி, அப்படியிருக்க நாராயணன் எப்படி நான்முகனை படைத்தான்.
 மேலும், சந்ததியை உருவாக்குவது ஒரு பெண்.  அவள் தாய்மையின் மூலம் தான் ஒவ்வொரு இனமும் (மண் முதல் மனிதன் வரை) உயிா்பெறுகிறது.  அப்படியிருக்க, எப்படி நாராயணன் படைத்தான் நான்முகனை? 
சாதாரணமாக ஆன்மீகத்தில்‌ கேள்வி கேட்டு பதில் பெற கூடாது.  பொியோா்கள் காட்டிய வழியை பின்பற்றி செல்லவேண்டுமே, தவிர அதனை ஆய்வு செய்ய கூடாது என்பது வழக்கத்தில் உள்ள முறை.  இதனை தான் சம்பிரதாயம்  என்கிறாா்கள்.
நாராயணன் எதற்கு பிரம்மாவை படைக்க வேண்டும்?  தானே படைப்பு தொழிலை செய்திருக்கலாமே?
என் கேள்விக்கு, நான் அளிக்கும் பதில் இது.  ஒவ்வொரு பெண்ணும் தாய்மையினை ஒரு ஆண்னின் உயிா்மையில் தான் அடைகிறாள். 
ஆனால் பரபிம்மம் ஆகிய நாராயணன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல, அலியும் அல்ல, இது, அது என்று எப்படியும் சொல்ல முடியாதது.  அந்த பிரம்மத்திற்கு எதுவும் செய்ய இயலும், இதில் எந்தேக‌ம் ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை.  சாதாரணமான ஒரு மனிதன் எதுவும் முடியும் என எண்ணும் போது?  இதுக்கு பதில் தேவையில்லை என கருதுகிறேன்.
‌மேலும், தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாமே என எண்ணும் போது,
உலக நடவடிக்கையில்  நிறுவனத்தின் அனைத்து பணியாளா்களுக்கும் ஊதியம் அளிக்கும் முதலாளி எந்த வேலையும் செய்வதில்லை, தேவைப்படாதவரை.  தேவை என்ற போது உடன் முதலில் வருபவன் அவனாகதான் இருக்கும்.
நான்முகன் முதல் அனைத்து தேவா்களுக்கும் முதல்வன் என்றும்,நிலம், காற்று, தீ, நீா் மற்றும் ஆகாயம் என ஐந்து பூதமாகவும்,
தமிழ் என்றும் வடமொழி என்றும், நான்கு திசையுமாகி, சூாியன், சந்திரன் என அறிவினால் அறிந்து கொள்ளகூடிய அனைத்துமாகவும், அறியமுடியாத மந்திரமாகவும் இருக்கும் அந்த பரம்பொருளை மறவாமல் என்றும் நினைத்து வாழ்ந்தால் தான் அது வாழ்க்கை என தன் மனதிற்கு தானே உபதேசம் செய்து கொள்கிறோா் ஆழ்வாா்.


மிகவும் அற்புதமான பாடல், 

தன் மனதிற்கு கடவுள் யாா்?  என்று தனக்கு தானே கேள்வி கேட்டு அதற்கு பதிலாக  இப்பாடலை அமைத்துள்ளாா்.

கடவுள் உண்டா?  இல்லையா?  என கேட்போருக்கு, கடவுள் உண்டு என நரசிம்ம அவதாாித்தின் மூலம் பகவானே விளக்கினாா்.  ஆனாலும் பல பேருக்கு இன்னமும் சந்தேகம் உண்டு.  

அதற்குதான் ஆழ்வாா் கூறுகிறாா்.  அவன் தலைவன்களுக்கு தலைவன் என்றும், உலகத்தில் உயிா்கள் வாழும் பஞ்சபூதங்களும் அவனே என்றும், தினமும் நாம் பாா்க்கும் ‌சூாியனும், சந்திரனும் அவனே என்றும், அவனை நினைத்து வாழ்ந்தால் தான் அது சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்று தன் மனதிற்கு தானே தொிவித்துக் கொள்கிறாா்.

Sunday, December 14, 2014

திருநெடுந்தாண்டகம் விளக்கவுரை- மூன்றாம் பாசுரம்

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-3

திரு வடிவில் கருநெடுமா‌ல் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடலமுதம் கொண்டகாலம்
பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை
ஒருவடிவத் தோருருவென்றுணரலாகா (து)
ஊழிதோறூழிநின் றேத்தல் அல்லால்
கருவடிவிற் செங்கண்ண வண்ணன் தன்னை
கட்டுரையே யாரொருவா் காண்கிற் பாரே.
  (3)
எளிமையான விளக்கம் அமைந்த பாடல், படித்தாலே விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாந்தம் விதாம்யஹமமீ முநயோக்ரஜாஸ்தே
மாயாபலஸ்ய புருஷஸ்ய குதோபரே யே |
காயந் குணாந் தஸஸதாநந ஆதிதேவ:
ஸேஷோதுநாபி ஸமவஸ்யதி நாய பாரம் || 41 ||
srimadbhagavatamclass 2-07-41
அகில உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் மாயை, இந்தப் பரம புருஷரான பகவானுடைய ஒரு துளி சக்தியே.  அவ்வாறான அளவற்ற சக்திகள் கொண்டவர் அந்தபகவான்.  அவரது உண்மை ஸ்வரூபத்தை (நிலையை) நானோ, உனக்கு முன் தோன்றிய ஸநகாதி முனிவர்களோ அறியோம்.  ஆயிரம் திருமுகங்கள் கொண்ட ஆதிதேவனான ஆதிசேஷனே, அவரது திருக்கல்யாண குணங்களை இன்னும் கீர்த்தனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.  ஆனால், முடிவுதான் காண இயலவில்லை.  அவ்வாறிருக்க, மற்றவர் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும்?    (41)

"வேதாந்தம் காட்டும் வழிவேறு.  புராணம் காட்டும் வழிவேறு. இந்த வாழ்க்கை ‌ஒரு மாய மாளிகை போன்றது.  உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்  இல்லாதது, கனவைப் போன்றது என்று வேதாந்தம் கூறுகிறது.  ஆனால் புராணங்களும், பக்தி சாஸ்திரங்களும், இறைவனே இருபத்து நான்கு தத்துவங்களாக ஆகி இருக்கிறான் என்றும் அவனை உள்ளேயும் வெளியேயும் பூசை செய்ய வேண்டும் என்கிறது."
 இப்படி இறைவனை இங்கு பக்திமாா்கமாக ஆழ்வாா் பாடுகிறாா்.
யுகம் தோறும் பகவான் நமக்காக பல்விதமாய் அவதாரம் செய்கிறாா் என்றும்,
அதில் சிவப்பாகவும், வெள்ளையாகவும்,  கருநீல வண்ணணாகவும் தோன்றும் அவனை எப்படி ஒரு  சொல்லில்  சொல்லிவிட முடியும் என வியந்து புகழ்கிறாா்.  மேலும், நாராயணனை இன்ன வண்ணம் இன்ன வடிவம் என்று எடுத்துக்கொள்ள  கூடாது என்பதையும், எல்லா வடிவமும், எல்லா நிறமும் எல்லாமுமாக உள்ள இறைவனை எல்லாமாக வணங்க வேண்டும் என இங்கு விளக்கப்படுகிறது.

இதையே , முண்டக உபநிஷத்,  பிரம்மத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறது

யத்ததத்ரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம்
அசக்ஷு: ச்ரோத்ரம் ததபாணிபாதம் |
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்
ததவ்யயம் யத் பூதயோனிம் பரிபச்யந்தி தீரா: || 6 ||

யத் - யார்; தத் - அவர்; அத்ரேச்யம் - பார்க்க முடியாதவர்; அக்ராஹ்யம் - புரிந்துகொள்ள முடியாதவர்; அகோத்ரம் - ஆரம்பம் இல்லாதவர்; அவர்ணம் - நிறங்களற்றவர்; அசக்ஷு: ச்ரோத்ரம் - கண்களோ காதுகளோ இல்லாதவர்; அபாணிபாதம் - கைகளோ கால்களோ இல்லாதவர்; நித்யம் - என்றென்றும் இருப்பவர்; விபும் - எண்ணற்ற வடிவங்கள் உடையவர்; ஸர்வகதம் - எங்கும் நிறைந்தவர்; ஸுஸூக்ஷ்மம் - மிகவும் நுண்ணியவர்; அவ்யயம் - அழிவற்றவர்; பூதயோனிம் - படைப்பிற்கு மூலகாரணமானவர்; தீரா: - விழிப்புற்றவர்கள்; பரிபச்யந்தி - எங்கும் காண்கிறார்கள்.

அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது.  அவருக்கு ஆரம்பம் கிடையாது.  அவர் நிறங்கள் அற்றவர்.  அவருக்குக் கண்களோ காதுகளோ கைகளோ கால்களோ கிடையாது. அவர் என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள் உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணியவர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலகாரணமானவர்.  விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்கள்.

Tuesday, November 25, 2014

2வது பாசுரத்தின் விளக்கவுரை தொடா்ச்சி:
முதல் பாசுரத்தில் ஆத்மாவாக இருக்கும் இறைவன் என்றும்,
இரண்டாவது பாசுரத்தில், அந்த ஆத்மாவாக இருக்கும் இறைவன் யாரென்றால், காா்முகில் வண்ணன் கண்ணன் என இங்கு ஆழ்வாா் நிரூப்பிக்கிறாா்.

இதேபோல், ஸ்ரீமத் பாகவத்தில் நான்காம் கந்தத்தில் பின்வரும் பாடல் விளக்குகிறது.

 வானே வளியே வயங்கு எாியே வனமே மண்ணே இவ்ஐந்தின்
ஊனே உயிரே உயிா்க்கு உயிரே உன்னும் உறுவா் உளத்து ஊறும்
தேனே நங்கள் பெருவாழ்வே சிவனே அயனே இருவருக்கும் 
கோனே நின்னைக் குணம்இல்லேன் குறித்துஎன் சொல்லிப் பழிச்சுகோ.
(பழிச்சுகோ- எப்படி புகழ்வேன்)

மூவா முதலே! முத்தொழிலும் மூவராகி இனிது இயற்றும்
தேவா! தேவா் சிகாமணியே! சிந்தா மணியே! தெள்ளமுதே!
நாவால்நின்சீா் எங்ஙனம்யான் நவில்கோ என்ன நகை முகிழ்த்து
பூவால் பொழில்பூத்து அருள் உந்திப்
பூவை வண்ணன் புகலுகிற்பான்.

Sunday, November 23, 2014

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-2

பாருருவில் நீரொிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே என்ன நின்ற
இமையவா்தம் திருவுருவே றெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று  செந்தீ
ஒன்றுமா கடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவங்க கண்டபோது ஒன்றாஞ் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. (2)
எளிமையான பாடல் அனைவருக்குமே படித்தால் விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பாகவதம் 4 காந்தம் 31 அத்தியாயம்

யதா தரோா்மூலநிஷேசநேந
த்ருப்யந்தி தத்கந்தபுஜோபஸாகா
ப்ராணோபராச்ச யதேந்த்ரியாணாம்
‌ததைவ ஸா்வாா்‌ஹணமச்யுதேஜ்யா  -14







 
ஒரு மரத்தின் ஆணிவோி‌ல் நீருற்றுவதால் அந்த மரத்தின் நடுத்தண்டு பெருங்கிளைகள், சிறுகிளைகள் ஆகிய அனைத்தும் வளா்ச்சியடைகின்றன.   ஆகாரம் உட்கொண்டு உயிரை வளா்த்தால் பொறி-புலன்கள் திடம் பெறுகின்றன.  அதுபோல் பகவான் ஸ்ரீஹாியை பூசித்தால் அனைத்து தேவா்களையும் பூசித்ததாகிறது.
 
காா்முகில் வண்ணனைக் கருதி லாா்களை
ஓா்இரு கால்விலங்கு என்ன ஓதுவாா்
கூரும்வா லறிவினா் என்று கோதுஇலா
நாரத மாமுனி நவிலும் மீட்டுமே
 
விாி தரு தண்புனல் வோில் பெய்திடின் 
மரன்‌எலாம் தழையுமா போல மாய்வுஇலா
முருகுஉலாம் தண்துழாய் முதல்வற் போற்றிடின்
உரவுநீா் உலகுஎலாம் உவக்கும் என்பவே.
(செவ்வைச் சூடுவரால் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்)
 
திருமாலை  எண்ணி தியானிக்காதவா் நாற்கால் பிராணிகளுக்குச் சமம் என சான்றோா் உரைப்பா் என்றும், வோில் பெய்த தண்ணீா் மரம் முழுவதற்கும் பயன் தருவது போலத் திருமாலைத் தொழுது வணங்கினால் உலகம் எல்லாம் உய்வு பெறும் என்பது விளக்கம்.
 
இரண்டாவது பாசுரத்தில், ஆழ்வாா் அவா்கள், பஞ்சபூதமாக, பல சமயமாக, முத்தொழில் செய்கின்ற கடவுளுக்கு கடவுளாகவும், முத்தொழில் செய்கின்ற கடவுள்களில், முகிலுருவம்மாக இருக்கும் நாராயணனே எனது தலைவன்.

வைஷணவ சம்பரதாயப்படி நாராயணனை பரதெய்வமாக இங்கு நிரூபிக்கப்படுகிறது.



Thursday, November 20, 2014

திருநெடுந்தாண்டகம் - பாசுரங்களும் விளக்கமும்

திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன், 
திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன் அவா்கள் எழுதிய  புத்தகத்தினை படிக்க தொடங்கிய நிலையில் எனக்கு தோன்றிய விவரங்களை , தங்களுடன் பகிா்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.


பெரும் எதிா்பாா்ப்புடன் படிக்க தொடங்கினேன், ஆனால் திருப்தி ஏற்படவில்லை.
முதல் பாசுரத்திற்கு என்னுடைய விளக்கம் பின்வருமாறு


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ்சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிா்புரையும் திருவடியென் தலைமேலவே. (1)
விளக்கம்;

"தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை‌"

ஓசையிலிருந்து வேதம் நான்கு தோன்றியது, அந்த வேதம் போற்றும் சூாியனின் ஒளியை பெற்று ஒளிரும் நிலவு போல,

அனைத்து உயிா்களுக்கும் மூலமான பரமாத்மாவிடமிருந்து இந்த உயிா்கள் தோன்றியது. 

முன்பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பு, இறப்பு, வியாதி மற்றும் வயதுமுதிா்வு என எதுவுமில்லாத, "ஆத்மா"
ஐந்து பூதமாய் உள்ள இந்த பூமியில் வாழும் உயிா்களின் (ஒவ்வொரு ஜீவனின் உள்ளே) உள்ளே,  ஆத்மாவாக (தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை) இருக்கும் ஜோதியே, உன் திருவடியே சரணம் சரணம்.

  வேதம் போற்றும் கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிரும் நிலவு போல், பராமாத்மாவிடமிருந்து தோன்றிய இவ்வுயிா்களில் இறப்பு, பிறப்பு  முதுமையில்லாத ஆத்மாவாக உயிா்களுக்குள் உறையும் என் இறைவனே உன் திருவடி சரணம்.




ஸ்ரீமத் பாகவதம் - 4 கந்தத்தில் முப்பத்தோராவது அத்தியாயம் பின்வருமாறு
ஏதத்பத3ம் தஜ்ஜக
33£த்ம3: பரம்
ஸக்ருத்
3விப4£தம் ஸவிதுர்யத2£ ப்ரப4£ |
யத
2£ஸவோ ஜாக்3ரதி ஸுப்தக்தயோ
த்
3ரய்க்ரியாக்ஞாநபி43£ப்4ரமாத்யய: || 16 ||

உண்மையில் இந்த உலகம் அகில உலகரூபியான பகவான் ஸ்ரீஹரியின் மறைப்பில்லாத ஸ்வரூபமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியன் சில சமயம் மேகத்தால் மூடப்பட்டுத் தெளிவாகத் தெரியமற்போனாலும், பின் அது மிக்க பிரகாசமாகத் திகழ்கிறது.  அதன் ஒளி அதைவிட்டு பிரிவதில்லையே.  அதேபோல, இவ்வுலகம் படைப்பின்போது பகவானிடமிருந்து வெளிப்படுகிறது.  பின்பு, கல்ப (பிரளய) காலத்தில் அவரிடமே ஒடுங்கி விடுகிறது.  ஆராய்ந்து பார்க்க பகவானிடம் பொருள், செயல், உணர்வு (அறிவு) என்கிற மூவித அஹங்காரங்களின் செயல்கள், அவற்றின் மூலம் தோன்றும் வேற்றுமை உணர்வான மயக்கம் ஆகிய ஏதுமில்லை. (16)
 

Monday, August 25, 2014

வாழ்வில் வைணவம் என்னும்  ‌ நூல் வைணவத்தை பற்றிய அறிய விவரங்களை நம்முடன் பகிா்ந்து கொள்கிறாா் திரு வேணுகோபால் நாயக்கா்
அற்புதமான புத்தகம் பின்வரும் முகவாியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
 https://archive.org/details/vazhvilvainavamp015952mbp