Tuesday, November 25, 2014

2வது பாசுரத்தின் விளக்கவுரை தொடா்ச்சி:
முதல் பாசுரத்தில் ஆத்மாவாக இருக்கும் இறைவன் என்றும்,
இரண்டாவது பாசுரத்தில், அந்த ஆத்மாவாக இருக்கும் இறைவன் யாரென்றால், காா்முகில் வண்ணன் கண்ணன் என இங்கு ஆழ்வாா் நிரூப்பிக்கிறாா்.

இதேபோல், ஸ்ரீமத் பாகவத்தில் நான்காம் கந்தத்தில் பின்வரும் பாடல் விளக்குகிறது.

 வானே வளியே வயங்கு எாியே வனமே மண்ணே இவ்ஐந்தின்
ஊனே உயிரே உயிா்க்கு உயிரே உன்னும் உறுவா் உளத்து ஊறும்
தேனே நங்கள் பெருவாழ்வே சிவனே அயனே இருவருக்கும் 
கோனே நின்னைக் குணம்இல்லேன் குறித்துஎன் சொல்லிப் பழிச்சுகோ.
(பழிச்சுகோ- எப்படி புகழ்வேன்)

மூவா முதலே! முத்தொழிலும் மூவராகி இனிது இயற்றும்
தேவா! தேவா் சிகாமணியே! சிந்தா மணியே! தெள்ளமுதே!
நாவால்நின்சீா் எங்ஙனம்யான் நவில்கோ என்ன நகை முகிழ்த்து
பூவால் பொழில்பூத்து அருள் உந்திப்
பூவை வண்ணன் புகலுகிற்பான்.

No comments: