Saturday, April 3, 2010

அதிகாரத்தை அடைய 48 விதிகள்

இந்த புத்தகத்தில்  எனக்கு படிச்சதில் பிடிச்சவை உங்களுக்காக,

1) நேர்மை நட்பினை வலிமைப்படுத்துவது அரிது.  எனவே ஒரு நண்பார் எவ்வாறு உண்மையாக உணர்கிறார்‌ என்பதை நீங்கள் எப்பொழுதும் தெரிந்து கொள்ள இயலாது
நேர்மை என்பது உண்மையிலே ஒரு மழுங்கிய கருவி.  அது வெட்டுவதை விட இரத்தக்களறி ஆக்குவதே அதிகம்.  நீங்கள் அதிகாரத்தை அடைய  ஆசையோடு விரும்பினால் சீக்கிரமாகவே நேர்மையை ஒதுக்கிவிடுங்கள்.
2) தேவைக்கு குறைவாகப் பேசுவதன் மூலம் நீங்கள் பொருளும் அதிகாரமும் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள், மேலும் எவ்வளவு குறைவாக நீங்கள் சொல்கிறீர்களோ அவ்வளவுக்கு முட்டாள்தனமாகவும் ஏன் ஆபத்தானதாகவும் எதையாவது சொல்வது குறையும்.

3) என்ன விலை கொடுத்தேனும், பிறர் கவனத்தைக் கவரும் வகையில் எடுப்பாக இருங்கள்,  உங்களைப் பிறர் அலட்சியப்படுத்தலை விட அவா்கள் உங்களைத் தாக்குவதும், ஏன் பழிப்பதும் கூட மேலானது.

4) நீங்கள் அடமையாக உழைத்துக் கொண்டிருக்கும் கணத்தில், உங்களுக்கு மேலே பிணந்தின்னிக் கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டுள்ளன.  உங்கள் படைப்புத் திறனைப் பயன்படுத்தித் தாங்கள் பிழைத்துக் கொள்ளவும், ஏன் உயிர் வாழவும்  கூட அவை திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.  அதைப்பற்றி புகார் செய்வதில் பலனில்லை.   நீங்களே ஒரு பிணந்தின்னிக் கழுகாக மாறி, ஏராளமான நேரத்தையும் சக்தியையும் சேமியுங்கள்.

5) வேட்டைகாரன், தன் திறமையை நம்பி விலங்குகளின் பின்னால் ஓடினால், விலக்குகளை முந்த முடியாது.  உண்மையில் நல்ல குதிரைகளும், வலிமையான வண்டிகளும் பயன்படுத்தப்பட்டால் சாதாரண அடிமை ஆண்களும், பெண்களும் கூட விலங்குகளைப் பிடித்து விடலாம்.
6) எப்போதும்  வாதிடாதீர்கள்.  சமுதாயத்தில் எதையும் வாதம் செய்தல் கூடாது.  முடிவுகளை மட்டும் கொடுங்கள்.

7) மகிழ்ச்சியானவர்களுடனும், அதிர்ஷ்டக்காரர்களுடனும் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

8) நீங்‌கள் சோகமானவராயின், உற்சாகமானவரை நோக்கித் தரை இறங்குங்கள்.  நீங்கள் தனித்து வாழ விரும்புபவராயின் கூடி வாழ விரும்புபவருடன் வலுக்கட்டாயமாக நட்பு கொள்ளுங்கள்.  உங்கள் குறைகளைப் பங்கிட்டுக் கொள்பவருடன் எப்போதும் இணையாதீர்கள்.  உலகில் உள்ள எல்லா மருத்துவ முறைகளை விட, இதன் மூலம் நீங்கள் அதிகப் பயன் அடையலாம்.

No comments: